பத்தினி பவானி.. சித்தினி சீதா..
வல்லூர் என்ற ஊரில் பவானி, சீதா என்று இரு பெண்கள் நண்பர்களாக இருந்தனர். பவானிக்கு வயது 40. சீதாவுக்கு வயது 38. இவர்களுடைய கணவர்கள் சுந்தரமும், சுரேஷூம் நண்பர்களாகவும், தொழிலில் பங்குதாரர்களாகவும் இருந்தார்கள். ஒரு முறை பவானி வீட்டிற்கு சீதா வந்தாள். அப்போது பவானி ஒரு ஏணியின் கீழ் நின்று எதையோ மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீதாவைக் கவனித்ததும் அவள் வந்து வாசல் கதவைத் திறந்து விட்டாள். அப்போது அவள் முகம் சற்று சிவந்தும், வியர்த்தும் இருக்கிறதை சீதா கவனித்து, “என்ன அக்கா எப்படி இருக்கிறீர்கள்..?” என்று வினவினாள். “நன்றாக இருக்கிறேனே..!!” என்று பவானி சொல்வது சமாளிப்பாக தெரிந்தது. எப்போதும் பவானி அப்படித்தான். மனதில் பட்டதை உடனே சொல்ல மாட்டாள். வற்புறுத்தி விஷயத்தை கறப்பதையும் விரும்ப மாட்டாள். எனவே சீதா அந்தப் பேச்சை விட்டு விட்டாள். அவர்கள் வீட்டிற்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, ஏணியின் வழியாக ஒருவன் இறங்கி வருவதை சீதா கண்டாள். அந்த மனிதனின் பெயர் ராமராஜ். அவன் ஒரு பெயிண்டர் என்பதை அவன் தோற்றம் உணர்த்தியது. அவனுக்கு 25 வயதுக்குள்தான் இருக்கும். அடர்ந்த கேசமும், மீசையு...